News Just In

5/26/2023 11:10:00 AM

17 பாடசாலை மாணவர்கள் அதிரடியாக கைது!




புத்தளம் - தில்லையடியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை சம்பவம் தொடர்பில் முன்னதாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதான மாணவர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

No comments: