News Just In

4/15/2023 05:42:00 PM

பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி..!

தொம்பஹவெல மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான நிலைமைக்குள்ளாகியுள்ளார்.

அதன் பின்னர் மொனராகலை சிறிகல வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவியின் மரணம் போன்று நாட்டில் இள வயது மரணங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: