News Just In

4/15/2023 07:49:00 AM

மருதமுனை 65M வீடுகளின் காணி எல்லைகள் பகிர்ந்தளிப்பு!

மருதமுனை 65 மீற்றர் வீட்டுத்திட்டத்தில் உள்ள 67வீடுகள் கடந்த 10ம் திகதி மக்களின் பாவனைக்காக கையளிப்பு செய்யப்பட்டது.

இவ் வீடுகள் அமைந்துள்ள காணிகளின் எல்லைப் பரப்புக்களை அளவீடு செய்து வீட்டுரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று(14) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் எம்.ஹிபாயத்துல்லா,காணி பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.எல்.எம் மபாஸ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த காணிகளின் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டதன் பின்னர் வீடுகளுக்குரிய எல்லைகளோடு வீட்டு பாதுகாப்பு சுவர்களை கட்டுமாறும் மேலதிக விடயங்களுக்கு பிரதேச செயலக காணி சம்மந்தமான உத்தியோகத்தர்களை அணுகி விடயங்களை கேட்டறிந்து கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

No comments: