இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணை எடுப்பு கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் (21-03-2023) கொழும்பு - மருதானை பகுதியில் பலர் வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளனர்.
நேற்றைய தினம் (20-03-2023) சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போதே, இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடன் வசதிக்கு அனுமதி வழங்கியதைக் கொண்டாடும் பலர் மருதானை பகுதியில் காணப்பட்டனர்.
No comments: