News Just In

3/19/2023 09:04:00 AM

முரண்பாடுகளற்ற சமூகத்தை நோக்கி இளையவர்களுக்குத் தெளிவூட்டல்!

அக்ரெட் (Acted) தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் இன, மதங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதனூடாக முரண்பாடுகளற்ற சமூகத்தை வலுப்படுத்தல் எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈஸ்வரர் சகவாழ்வு சங்கத்தின் தலைவர் கே. கிசோபன் தெரிவித்தார்.

இதற்கமைவாக ஈஸ்வரர் சகவாழ்வு மன்றம் மட்டக்களப்பு களுதாவளையில் உள்ள 6 ஆரம்பப் பாடசாலைகளையும் இணைத்துத் தரம் 5 கல்வி பயிலும் மாணவர்களுக்காக சமூக நல்லிணக்கம் தொடர்பான தலைப்புக்களில் மாணவர்கள் நேரடியாக கலந்து படைப்பாங்கங்களை உருவாக்கும் வகையிலான சித்திரப்போட்டி கட்டுரைப்போட்டி தெரு நாடகம் என்பனவற்றையும் நடாத்தியுள்ளது.

இந்நிகழ்வில் சமூக நல்லிணக்கம் சார்பான கதை சொல்லுதல் மற்றும் கருத்துரைகள் என்பன இடம்பெற்றன.

போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பங்குகொண்ட மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

.எச்.ஹுஸைன்








No comments: