News Just In

3/04/2023 06:34:00 PM

எரிவாயு விலை தொடர்பில் மகிழ்ச்சி தகவல்!

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை இம்மாதம் அதிகரிக்கப்படவிருந்த நிலையில் , டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நாளை(05) அறிவிப்பார் என கூறப்படுகின்றது.

அதேசமயம் எரிவாயு விலை அதிகரித்தாலும், குறைந்தாலும் பெரிய தொகையாக இருக்காது எனவும் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

No comments: