News Just In

3/04/2023 02:12:00 PM

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த 4 பேருந்துக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்த நான்கு பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கை நேற்றய தினம் (03.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெலிபன்ன மற்றும் குருந்துகஹா ஆகிய இடங்களில் வைத்தே 4 பேருந்துக்கள் கைப்பற்றப்பட்டதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த 4 பேருந்துக்களும் அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்வதாக கூறி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: