News Just In

3/01/2023 07:56:00 AM

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இலங்கைக்கு சொந்தமான 36 பில்லியன் டொலர்கள்!

இலங்கைக்கு சொந்தமான 36 பில்லியன் டொலர்கள் என்ற பாரிய தொகை வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள வொஷிங்டனில் உள்ள Global Financial Intercredit அமைப்பினால் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட தொகையே இவ்வாறு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொகையைப் பெறுவதற்கு மத்திய வங்கியோ, அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு வெளியே இந்த அளவு பணம் இருப்பது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குளோபல் நிதி நிறுவனம் கூறுகிறது.

No comments: