News Just In

3/07/2023 06:36:00 PM

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜய 125ம் ஆண்டு ஓராண்டு தொடர்விழா!

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜய 125ம் ஆண்டு ஓராண்டு தொடர்விழா நிறைவு நிகழ்வு நேற்றும் இன்றும் கல்லடி சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நடைபெற்றது. விழாவை சிறப்பிக்கும் முகமாக ஸ்ரீமத் சுவாமி சத்யேஷானந்தஜீ மஹராஜ் (உதவி பொதுச் செயலாளர், உலகளாவிய ராமகிரிஷ்ணமிஸ்ஸன்) ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் (தலைவர், இராமகிரிஷ்ணமிஷன், இலங்கை) ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் (பொதுமுகாமையாளர், இராமகிரிஷ்ணமிஷன், மட்டக்களப்பு) அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு நேற்று பொதுமக்களுக்காக விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்திலும், இன்று மாணவர்களுக்காக இராமகிருஷ்ண மிஷன் கோவிலிலும் நடைபெற்றது.

பெருவாரியான மக்கள் கலந்துகொண்ட நிகழ்வில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் பேசுகையில் "ஒரு நாட்டுக்கு பிற நாடுகளில் இருந்து பலர் வருகிறார்கள் போகிறார்கள். ஆனால் சில மகான்கள் மகா புருஷர்கள் வந்துபோகும் பொது அந்நாட்டில் ஒரு மலர்ச்சியும் மாற்றமும் ஏற்படுகிறது என்றார்.


No comments: