News Just In

2/27/2023 07:45:00 AM

நாயையும் விட்டுவைக்காத கொடூர நபர்; வெளியான அதிர்ச்சி தகவல்!

விலங்குகள் தன்னார்வலர் ஒருவர் பகிர்ந்த வீடியோவில் ஒரு நபர் தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்யும் மனிதநேயமற்ற செயல் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியில் ஹரி நகர் என்னும் இடத்தில் இந்த கீழ்த்தரமான செயல் நடந்துள்ளது. இதுகுறித்து அவர் ஹரி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளார்.

எனினும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர் அந்த கொடுஞ்செயல் விடியோவை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்தார்.

இதற்கு பல்வேறு விலங்கு வதை தடுப்பு தன்னார்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இறுதியாக அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவான் என டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: