News Just In

2/15/2023 07:50:00 AM

பல வாகனங்கள் மோதிக் கொண்ட பாரிய விபத்தில் மூவர் பலி : கனடாவில் சம்பவம்!

கனடாவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் பாரிய விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் இதுவரையில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் இட்டாபிகொக் பகுதியின் 427ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய ஒர் வாகனம் குடை சாய்ந்து தீப்பற்றிக் கொண்டதாக றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திலேயே இந்த விபத்தில் சிக்கிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துச் சம்பவம் காரணமாக குறித்த வீதி சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments: