News Just In

1/03/2023 06:36:00 PM

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பான தகவல்!

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நேற்று ஆரம்பமாகியுள்ளன.

அதற்கமைய நேற்று முதல் ஆரம்பமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

பின்னர் ஜனவரி 21ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை காரணமாக மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

No comments: