![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXmGQOSuva0qQWwFeQWBVkTYt5CclsxdoB1TqsWE2Iz-CKijdquo6nFIB4SVUfdoZtuWhgbkK01YRrikhTbqUN_Dmlmg3O5oIr8IZMr8lmWfpp13Lyu2uteDjFUL0grEuNATzVJx9T711TJunMpnictdPq89SVINIB7yOqxkOTbSBsP2U79vO1YKBeeA/w640-h360/Downloads58.jpg)
எஸ்.எம்.எம்.முர்ஷித்
போதையில் இருந்து எமது சமுகத்தையும் எமது பிரதேசத்தையும் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கண்டன பேரணி இன்று வெள்ளிக்கிழமை (27.01.2023) செம்மண்ஓடையில் இடம் பெற்றது.
செம்மண்ஓடை பள்ளிவாயல்கள் சமுக நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.அப்துல் றகுமான் தலைமையில் இடம் பெற்ற இக் கண்டனப் பேரணியில் செம்மண்ஓடை பிரதேசத்தை சேர்ந்த குபா பள்ளிவாயல், தக்வா பள்ளிவாயல், பாரி பள்ளிவாயல், அஸ்ஸைப் பள்ளிவாயல், ஸபா பள்ளிவாயல்களில் இருந்து ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஊர்வலமாக வந்த மக்கள் செம்மண்ஓடை சாட்டோ மைதானத்தை வந்தடைந்ததும் கண்டனப் பிரகடனம் இடம் பெற்றதன் பின்னர் பொது மக்கள் கலைந்து சென்றனர்.
கண்டனப்பிரகடனத்தில் போதைப் பாவனையில் ஈடுபடுவோருக்கும் அவற்றினை விற்பனை செய்யும் நபர்களின் குடும்பத்தின் எந்தவிதமான நன்மை தீமைகளிலும் ஊர்பொதுமக்கள் கலந்து கொள்வதில்லை என்றும் அவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்று பிரகடனம் சம்மேளனத் தலைவரினால் வாசிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர்.பண்டார, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர், சிரேஷ்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.றாசிக் மற்றும் பள்ளிவாயல்களின் பிரதம இமாம்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments: