கொழும்பு சந்தையில் போலி நாணயத்தாள்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்ட இருவரும் அந்தப் பகுதியிலுள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருளை பெற முயன்றனர்.
இந்நிலையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர்.
No comments: