News Just In

1/04/2023 07:47:00 AM

இலங்கையில் இரு வெளிநாட்டு பிரஜைகளுக்கு நேர்ந்த பரிதாப நிலை!

அம்பாறை மாவட்டம் - அக்கறைப்பற்று கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து அக்கறைப்பற்று கல்முனை வீதி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவது, வெளிநாட்டு பிரஜைகள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோட்டார் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: