News Just In

1/27/2023 07:12:00 PM

யாழ்.மாவட்ட மின் பாவனையாளகளுக்கு எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேல் மின் கட்டணம் நிலுவையுள்ள வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என யாழ்.தலைமை பிரதம பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

அதோடு துண்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் 3 ஆயிரத்து 250 ரூபாய் மீள்இணைப்பு கட்டணம் அறவிடப்படுவதோடு 6 மாத காலத்துக்கு மேலாக மின்துண்டிப்பு செய்யப்பட்டு நிலுவை செலுத்தப்படாத பாவனையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .

எனவே மின்சார கட்டணம் செலுத்தாது நிலுவை உள்ள பாவணையாளர்கள் உடனடியாக மின்சார கட்டண நிலுவையை செலுத்தி மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளர்.

No comments: