News Just In

1/31/2023 06:37:00 PM

ஜனாதிபதியின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும்; அனுரகுமார திஸாநாயக்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி யாருடையது என்பது குறித்தும் ஆராய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments: