News Just In

1/24/2023 06:54:00 PM

அரசாங்க வேலைக்காக 6 மாத குழந்தையை கொலை செய்த பெற்றோர்!

அரசாங்க வேலையை தக்க வைத்துக்கொள்வதற்காக, 6 மாத குழந்தையை கால்வாயில் எறிந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. ராஜஸ்தானின் பில்கானேர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கணவனும் , மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரிய்வருகையில்,

மேற்படி பெண் குழந்தை 36 வயதான ஜவஹர்லால் மேக்வால், கீதா தேவி ஆகியோரின் 3 ஆவது பிள்ளையாகும்.

ராஜஸ்தான் மாநில அரசாங்க கொள்கையின்படி, அரச ஊழியர்கள் 2 பிள்ளைகளை மாத்திரமே பெற முடியும். 3 ஆவது பிள்ளை பிறந்தபின் அரச பணியிலிருந்து கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும்.

இந்நிலையில், தனக்கு ஏற்கெனவே இரு பிள்ளைகள் உள்ள நிலையில், 3 ஆவது குழந்தை பிறந்ததால் அரசாங்கத் தொழிலை இழக்க நேரிடும் என ஜவஹர்லால் மேக்வால் அச்சமடைந்தாராம். இதனால், அவர் மேற்படி பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

No comments: