News Just In

1/27/2023 07:50:00 AM

நைஜீரியாவில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: 54 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி கால் நடை மேய்ப்பவர்கள், பொதுமக்கள் என 54 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது தெரியவில்லை.

வடமத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக நசராலா மாகாண கவர்னர் அப்துல்லாஹி கூறும் போது,

"இந்த சம்பவத்தால் ஏற்படக்கூடிய பதட்டத்தை தணிப்பதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு நிறுவனங்களை சந்தித்து வருகிறோம்" என்றார்.

No comments: