News Just In

12/04/2022 08:11:00 AM

விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த!

இலங்கையில் விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் விபசாரத்தை நடைமுறைப்படுத்தினால் தான் இந்த நாட்டில் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

எனவே விபசாரத்தை சட்டபூர்வமாக்க சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது முக்கியம் என்றாலும் சமூக சீர்திருத்தங்களில் இலங்கை இறங்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: