News Just In

12/08/2022 07:33:00 AM

யானை தாக்கி அடையாளம் தெரியாத வயோதிபர் பலி; வாழைச்சேனை புணானை பகுதியில் சம்பவம்




(எச்.எம்.எம்.பர்ஸான்)
யானை தாக்கி நபரொருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை பகுதியில் வைத்து இந்த சம்பவம் இன்று (7) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர் 60 வயது மதிக்கத்தக்கவர் என்றும், மரணமடைந்த நபர் யாரென்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு மரணமடைந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments: