கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு நாளை 18.12.2022 காலை 10.00 மணிக்கு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் சிவநேசராசா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கிராமிய வீதி அபிவிருத்தி துறையின் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான திரு. கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக லயன். கணபதிப்பிள்ளை பாஸ்கரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேற்படி நிகழ்வில் க.பொ.த (சா/த) - 2022 பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளதுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வினை கல்வி அபிவிருத்திச் சங்கம், கல்வி அபிவிருத்திச் சங்க பழைய மாணவர் அமைப்பு மற்றும் பெற்றோர் அமைப்பு என்பன இணைந்து நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: