புத்தளம் – ஆனமடுவ பகுதியில் கணவனிடம் 35 இலட்சம் ரூபா கப்பம் கோரிய பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்மை யாரோ கடத்தி விட்டதாக கணவரிடமும் பிள்ளைகளிடமும் நாடகமாடி பணம் பெற்றுள்ள குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி ஆனமடுவ பிரதேசத்திலிருந்து மகளின் வீட்டுக்குச் செல்வதாக கூறிச் சென்ற பெண் காணாமல் போயுள்ளார்
போலி கடத்தல் நாடகமாடிய பெண்
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது குறித்த பெண் போலி கடத்தல் நாடகமாடியமை கண்டறியப்பட்டுள்ளது.
கடன் தொகை ஒன்றை செலுத்துவதற்காக தாம் இவ்வாறு கணவரிடம் கப்பம் கோரியதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: