News Just In

12/25/2022 11:51:00 AM

ஏறாவூரில் மின்னல் தாக்கி 27 உயிர்கள் பலி!




நாட்டின் காலநிலை மாற்றம் காரணமாக இன்று (டிச. 25) அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய இடி, மின்னல் தாக்கத்தினால் ஏறாவூரிலுள்ள வீடொன்றிலிருந்த பண்ணை மீது இடி, மின்னல் விழுந்ததில் அந்தப் பண்ணை முற்றாக கருகி சாம்பலாகியுள்ளது.

கூலித் தொழிலாளியான இஸ்மாயில் அன்வர் என்பவர் தனது வீட்டிலேயே குறித்த பண்ணையை அமைத்து, ஆடு, கோழி மற்றும் வாத்து என்பவற்றை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நேற்று மாலையிலிருந்து பாரிய இடி, மின்னலுடன் மழை பெய்துகொண்டிருந்ததை தொடர்ந்து, இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய இடி, மின்னலினால் குறித்த பண்ணையில் இருந்த 9 ஆடுகள், 11 கோழிகள், 4 சேவல்கள், 3 வாத்துக்கள் என்பவை கருகி சாம்பலாகியுள்ளன.

இரு தட்டுக்களை கொண்ட அந்தப் பண்ணையின் மேற்பகுதியில் ஆடுகளும், கீழ்ப்பகுதியில் கோழிகளும் வாத்துக்களும் இருந்த நிலையிலேயே அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.




No comments: