News Just In

12/29/2022 07:05:00 AM

தாய் செலுத்திய முச்சக்கர வண்டியால் 07 வயதான மகளுக்கு நேர்ந்த துயரம்!

துளை, கஹட்டரூப்ப காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட அம்பிட்டிய வீதியில் முச்சக்கரவண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஏழு வயது சிறுமி பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் தாய் உள்ளிட்ட மூன்று பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கஹட்டரூப்பவில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் அம்பிட்டிய பகுதியிலிருந்து முத்துமால பகுதிக்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி அம்பிட்டிய சந்தியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
இதில் குறித்த முச்சக்கரவண்டியை செலுத்திய பெண் சாரதி உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் பலியாகியுள்ள சிறுமியின் தாயாரே முச்சக்கர வண்டியின் சாரதியாக செயற்பட்டுள்ளார். சிறுமியின் தாய் உட்பட மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரணித்த சிறுமி முத்துமால கொவிபொல கெந்தகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். பேருந்தின் சாரதி கஹட்டரூப்ப காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டரூப்ப காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: