News Just In

11/24/2022 07:20:00 PM

கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு விதிக்கப்பட்டுள்ள போட்டி தடை!

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ  மீது குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் போட்டியொன்றின்போது தன்னுடன் புகைப்படம் எடுக்க முயன்ற உதைபந்தாட்ட ரசிகரின் கையடக்கத் தொலைபேசியை தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ரொனால்டோ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையில் அவருக்கு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இரண்டு உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரொனால்டோவுக்கு எதிரான தற்காலிக தடை அவர் பங்கேற்கும் உள்நாட்டுப் போட்டிகளுக்குப் பொருந்தும் என்றும் இந்த தடை பீஃபா உலகக் கிண்ணத் தொடரில் அவர் பங்கேற்பதற்கு எந்தத் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிரதிநிதித்துவப்படுத்தும் போர்த்துக்கல் அணிக்கும் கானா அணிக்கும் இடையிலான போட்டியொன்று இலங்கை நேரப்படி இன்று (24.11.2022) இரவு 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments: