News Just In

11/18/2022 03:25:00 PM

தனியார் வைத்திய நிலையம் ஒன்றின் ஊழல்களை அம்பலப்படுத்திய கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினியின் தனிப்பட்ட விடயங்களை வைத்து மிரட்டும் கும்பல்!





கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினி அண்மையில் மருத்துவ மாபியாக்களைன்றின் தனியார் வைத்திய நிலையம் ஒன்றின் ஊழல்களை அம்பலப்படுத்தியிருந்தார்.

அதில் அரச அரசியல்வாதி ஒருவர் முறையற்ற முறையில் வைத்தியரோடு முண்டியிருந்தார் இந்நிலையில் தற்போது அவரது தனிப்படட படங்கள் சில வெளியாக்கியுள்ளன இது ஒருவரின் தனிப்பட்ட விடயமாகும்.

ஒருவர் தன் வேலை செய்யும் துறையில் உண்மையாக இருந்ததால் , மக்களை உறிஞ்சும் சில புல்லுரிவிகளுக்கு அதனை தாங்க முடியவில்லை. இதற்காக அவரது தனிப்படட விடயங்களை தேடியதில் பெண் என பாராது கூட இருந்த சில துரோகிகளால் இப்போது அவர் அவமானப்படுத்தப்பட்டார்.

ஊழலை வெளிக்கொண்டுவந்த அதிகாரி அடக்கப்பட்டார்
இது அரசியல்வாதிகளுக்கு எதிராக அவர்கள் ஊழலை வெளிப்படுத்தும் நபர் இப்படித்தான் பழிவாங்கப்படுவார் என்பதை உணர்த்துகின்றது. ஒரு ஊழலை வெளிக்கொண்டுவந்த அதிகாரி அடக்கப்பட்டார் என்பதை மறந்துவிட்டார்கள்.

எனவே இனி யார் ஊழலை வெளிக்கொண்டுவந்தாலும் அவர்களுக்கும் இதுதான் நிலை என்பதையும் மறைமுகமாக சிலர் எச்சரிப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.

கிளிநொச்சி வைத்தியர் பிரியந்தினி மிரட்டல் சம்பவத்தில் தொடரும் மௌனம்? உண்மையை தட்டிக்கேட்க ஏன் யாரும் முன்வரவில்லை. பெண் என்பதாலா?

அதேவேளை கிளிநொச்சியில் பிரபல அரசியல்வாதியின் பின்னணியில் இவ்வாறான சேறுபூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அவரின் தேவைக்கு அமையவே சில தினங்களுக்கு முன்னர் பொதுமக்களால் வைத்தியர் பிரியாந்தினிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: