![](https://athavannews.com/wp-content/uploads/2022/11/Fertiliser-740x375.jpg)
பெரும்போக நெற்செகையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளது.கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அலுவலகங்கள் ஊடாக உரங்கள் வெளியிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் நிதியுதவி மூலம் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 22,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தின் மற்றுமொரு ஏற்றுமதி நேற்றுகொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இறக்குமதியை பார்வையிட்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, போதியளவு யூரியா உரம் கையிருப்பு உள்ளதாகவும், அவற்றை முறையாக விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
No comments: