![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwJX1wFAArhxcGoqi0_K3TS_hANF2Lb3RbFGuIX5yLXoH58JqiHo4QqsQ9LfziYeAU2kS-w_Fc7JhzbyIRojnxgj3cksu7B957KMMlzNwXti_pjsQf3YEWxNGAPdLhvOpDVcWlRJagcvIiK9UT4QVtjLctoG-bHQTRz7b7Y-8avCeJrRdSrr_KcoXIqw/w640-h360/Downloads93.jpg)
கல்லடி - உப்போடை, விவேகானந்தா மகளிர் கல்லூரியின் விவேகா பழைய மாணவர் சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் சனிக்கிழமை 22.10.2022 திகதி காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
“உதிரம் கொடுப்போம், உயிரைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு, கல்லடி - உப்போடை, விவேகானந்தா மகளிர் கல்லூரியின் நடராஜானந்தா மண்டபத்தில் இடம்பெறவுள்ள இரத்ததான முகாமிற்கு பழைய மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் மற்றும் இரத்ததான நிகழ்வில் பங்கேற்று இரத்ததானம் வழங்க ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர், ஏற்பாட்டுக்குழுவினருடன் இணைந்து அனுசரனை வழங்கும்
2021 Batch பழைய மாணவர்கள்.
இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர்கள் மற்றும் தாதிகள் குழாம் இரத்த சேகரிப்பில் செயற்படவுள்ளனர்.
இவ்விரத்ததான முகாமினூடாக பாடசாலை, பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை சமுகத்திற்குமிடையேயான தொடர்புகள் மேம்பட வாய்ப்புகள் அமையலாமென பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments: