News Just In

10/25/2022 12:51:00 PM

ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளர் திடீர் மரணம்.






-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளரான அப்துல்சாலி முஹம்மத் றியாழ் (வயது 42) செவ்வாய்க்கிழமை காலை 25.10.2022 திடீர் மரணமடைந்துள்ளார்.

சம்பவதினமான செவ்வாய்க்கிழமை அதிகாலை தனக்கு உடல் அசௌகரியம் ஏற்பட்டதை அடுத்து அவர் சுயமாக தனது காரில் செங்கலடியிலுள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.

அங்கு வைத்தியர் அவரை பரிசோதனை செய்து கொண்டிருக்கும்போது ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளர் றியாழ் மூர்ச்சையாகி பின்னர் மரணித்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காலஞ்சென்ற றியாழ் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு ஏறாவூர் நகர சபையின் உறுப்பினராகத் தெரிவாகி பின்னர் இவ்வருடம் ஏப்ரில் மாதம் 28ஆம் திகதி ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்று அச்சபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.

இவரது திடீர் மரணத்தையடுத்து ஏறாவூர் நகர சபையில் புதன் கிழமை 26.10.2022 இடம்பெறவிருந்த மாதாந்த அமர்வு பிற்போடப்பட்டுள்ளதாக நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.


No comments: