News Just In

9/03/2022 02:10:00 PM

யானை தாக்கி மீன் வியாபாரி மரணம்! புலிபாய்ந்த கல் பகுதியில் சம்பவம்




(எச்.எம்.எம்.பர்ஸான்)

யானை தாக்கி நபரொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் புலிபாய்ந்த கல் பகுதியில் வைத்தே இந்த சம்பவம் இன்று (3) காலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை - கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பொன்னுத்துரை ஆனந்தன் என்பவரே யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஓட்டமாவடி பகுதியில் இருந்து மீன்களை எடுத்துக் கொண்டு புலிபாய்ந்த கல் பகுதிக்கு விற்பனை செய்யச் சென்ற போதே யானை தாக்கி மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்த நபரின் உடல் கல்குடா அகீல் அவசர சேவை வண்டியின் மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: