News Just In

9/25/2022 05:36:00 PM

மாகாணசபை முறையை வலுப்படுத்த தெற்கு இளைஞர்கள் தயார்.





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஜனநாயக இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாகாண சபை முறையை வலுப்படுத்துவதற்காக ஜனநாயக இளைஞர் அமைப்பினர் உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து வெளியிட்டு வைத்த சமூகமயப்படுத்தப்பட்ட முன்மொழிவு சனிக்கிழமை(24) ஹம்பாந்தோட்டை கிரீன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

மாகாணத்தின் இளைஞர் அமைப்புக்களை பிரதிநிதிப்படுத்திய 200 பேரளவில் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவிலமைப்புக்களின் தலைவர்கள் பலர் பங்குபற்றினர். சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி திசரு திசாநாயக்க, 43 வது அணியை பிரதிநிதித்துவப்படுத்தி தீக்சன் கம்மன்பில் உள்ளிட்டோரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சிவிலமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தெற்கு இளைஞர்கள் தயாரித்த முன்மொழிவே இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன்போது தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தற்போதைய தலைவருமான மஹிந்த தேசப்பிரியவிற்கு குறித்த முன்மொழிவு வழங்கப்பட்டதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஆரம்பமானது.

ஆளுநர், முதலமைச்சரும் அமைச்சரவையும், மாகாண சபை மற்றும் மத்திய அரசு, சட்ட ஏற்பாடுகள், மாகாண நீதிமன்ற முறைமை, மாகாண நிதி அதிகாரம், மாகாண அரச சேவை, காணி மற்றும் இயற்கை வளங்கள், பொலிஸ் அதிகாரம்

உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.


No comments: