News Just In

9/25/2022 05:34:00 PM

காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட கைக்குழந்தை!

பண்டுவஸ்நுவர, பண்டாரகொஸ்வத்தை, உகுருஸ்ஸகம ஏரிக்கரையில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிதாகப் பிறந்த குழந்தையொன்று உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தை அழும் சத்தம் கேட்டு கால்நடைகளை கட்ட சென்ற பெண் ஒருவர் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த குழந்தையை கண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அங்கு வந்த கிராம மக்கள் அறிவித்ததன் பேரில் அம்புலன்ஸ் மூலம் குழந்தை நிகவெரட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: