News Just In

9/29/2022 07:33:00 AM

ஆங்கில தின நிகழ்வும், வாசிப்பு மூலை தொகுதி திறப்பு விழாவும்!

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆங்கில தின நிகழ்வும், வாசிப்பு மூலை தொகுதி திறப்பு நிகழ்வும் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரி.அஜ்மீர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆங்கிலப்பாட வளவாளர் எம்.ஐ.சித்தீக், ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.எம்.கடாபி, எச்.எம்.ஆதம் லெப்பை மற்றும் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர், வை.அஹமட் வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஐ.எம்.பஸீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவிகளின் கலை, கலாசார நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், கோட்டமட்ட ஆங்கில தின போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

No comments: