- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வர்த்தகம், முதலீடு, விவசாயம்> மீன் வளர்ப்பு> சுரங்கத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறைகளில் ஒத்துழைப்புக்களை விரிவாக்கும் நோக்கில் சவூதி அரேபியாவின் வர்த்தக உயர் மட்ட பிரதிநிதிகள் குழு விரைவில் கொழும்பு வரவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சவூதி அரேபியா சென்ற அமைச்சர் நஸீர் அஹமட் அங்கு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டார். றியாத் வர்த்தக சம்மேளனம்> முஸ்லிம் உலக சம்மேளனம்> மன்னர் சல்மான் அமைப்பு பிரதிநிதிகள் உட்பட சவூதி வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளையும் அமைச்சர் சந்தித்தார்.
முடிக்குரிய இளவரசர் சல்மான்பின் அப்துல் அஸீஸ் 2030இல்> முன்னெடுக்கவுள்ள சுற்றுலா> வர்த்தகத்துறை மேம்பாடுகளில் இலங்கையையும் உள்வாங்குவதற்கான விருப்புக்களை அமைச்சர் நஸீர் அஹமட் இதன்போது வெளியிட்டிருந்தார்.
இதனடிப்படையில் இதற்கான முன்னோடிக் கள விஜயமாக சவூதிஅரேபிய வர்த்தக உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கை வரவுள்ளது.
இதேவேளை> எகிப்தில் இடம்றெவுள்ள காலநிலை மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான எகிப்து தூதுவர் மேஜட் மொஸ்லிஹ் சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட்டை சந்தித்து இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
நொவெம்பெர் 06 முதல் 18 வரை எகிப்தில் காலநிலை மாநாடு நடைபெறவுள்ளது.
No comments: