News Just In

9/05/2022 12:02:00 PM

க.பொ.த. உயர் தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு !



2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமை பரீசில் பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரீசில் பரீட்சையை டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 2023 ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments: