சட்ட மற்றும் முறையான வழிகளில் நாட்டிற்கு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நான்கு சக்கர அல்லது இரண்டு சக்கர மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
சட்ட ரீதியாக வங்கி முறை மூலம் பணம் அனுப்பும் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வங்கி முறை மூலம் சட்டபூர்வமாகவும், முறையாகவும் பணம் அனுப்பும் வெளிநாட்டு பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இலங்கைக்கு பணம் அனுப்பிய தொழிலாளர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய இவ்வாறு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
No comments: