News Just In

9/20/2022 06:59:00 AM

வெளிநாடொன்றில் அடுத்தடுத்து இடம்பெற்ற கோர விபத்து! 19 பேர் பலி!

நைஜீரியாவில் லொறியும், பஸ்களும் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை பஸ் முந்த முயன்றது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்திசையில் வந்த லொறியின் மீது பயங்கரமாக மோதியது.

அடுத்த சில நொடிகளில் பின்னால் வந்த மற்றொரு பஸ்சும் லொறி மீது மோதியது. லொறியின் மீது இரண்டு பஸ்கள் அடுத்தடுத்து மோதிய நிலையில் 3 வாகனங்களிலும் தீப்பற்றியது.

சற்று நேரத்தில் 3 வாகனங்களும் தீயில் கருகி உருக்குலைந்து போயின. இந்த கோர விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

மேலும் 18 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: