கோட்டாபய ராஜபக்ச ராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பதால் 90 நாட்கள் தமது நாட்டில் தங்கலாம் என தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டொன் பிரமுத்வினாய் தெரிவித்தார்.
கோட்டபாயவின் விஜயத்தை இலங்கை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனவும் தாய்லாந்து அரசாங்கம் அவருக்கு தங்கும் வசதிகளை செய்து கொடுக்காது எனவும் டொன் தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்கிரமசிங்க,கோட்டாபய ஆட்சியின் கீழ் இருந்ததால் முரண்பாட்டை ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்தார்.
தாய்லாந்திற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது என்று கோட்டாபயவிற்கு நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
No comments: