News Just In

8/30/2022 06:29:00 AM

யாழில் எலிக்காய்ச்சல் நோயால் பரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்!

யாழ். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (29-08-2022) உயிரிழந்துள்ளார்.

யாழ். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் கடந்த 22-ம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பிடிக்கப்பட்ட நிலையில், முன்னதாக யாழ்ப்பாணம் பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் அங்கிருந்த மேலதிக சிகிச்சைக்காக கடந்த 25ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாளான இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: