News Just In

8/19/2022 12:20:00 PM

அடிக்கடி வேறு வேறு அமைச்சுக்களின் கீழ் நிறுவனங்கள் மாற்றப்படுவதால் நிலையான அபிவிருத்தியை மேற்கொள்ள முடிவதில்லை.




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அரதச நிறுவனங்கள் அடிக்கடி வேறு வேறு அமைச்சுக்களின் கீழ் மாற்றப்படுவதால்> இவ்வாறு செய்வதால்> அமைச்சின் செயற்பாடுகளை வினைத்திறனுள்ளதாக மேற்கொள்ள முடிவதில்லை என சுற்றாடல் அமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது விடயமாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்> அமைச்சுக்களின் செயற்பாடுகளை வினைத்திறனுள்ளதாக மாற்றுவதற்கு குறித்தொதுக்கப்படும் நிறுவனங்கள் ஆகக்குறைந்தது பத்துவருடங்களுக்காவது அதே அமைச்சின் கீழ் செயற்பட வேண்டும்.

ஆகக்குறைந்தது பத்து வருடங்களுக்காவது ஒரே அமைச்சின் கீழ் குறித்தொதுக்கப்படும் இலாகாக்கள் இருக்க வேண்டும். இவ்வாறு நிலையாக எந்த இலாகாக்களும் ஒரே அமைச்சின்கீழ் இருப்பதில்லை. அமைச்சுக்கள் மாற்றப்படும்போது அங்குள்ள நிறுவனங்களும் மாற்றப்படுகின்றன. சில அரசியல்வாதிகள் தங்களது தேவைகளுக்காக இவ்வாறு நிறுவனங்களை தமது அமைச்சின் கீழ் தருமாறு கோருகின்றனர்.

அமைச்சுக்கள் அதிகரிக்கப்படுகின்ற போதும் இதே நிலையே ஏற்படுகிறது. ஏதாவதொரு இலாகாவை (நிறுவனம்) வழங்கியே ஆக வேண்டும் என்பதற்காகவும்> இவ்வாறு ஒரு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனம் இன்னொரு அமைச்சுக்கும் அந்த அமைச்சிலிருக்கும் நிறுவனம் வேறொரு அமைச்சின் கீழும் கொண்டு வரப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுற்றாடல்துறை அமைச்சு இருந்தபோது> இருபது இலாகாக்கள் இருந்தன. இப்போது> இரண்டு நிறுவனங்களே தற்போது எனக்குக் கீழ் உள்ள சுற்றாடல் அமைச்சின்கீழ் உள்ளன. அதேவேளை சம்பந்தப்பட்ட அமைச்சுக்குப் பொருத்தமான நிறுவனங்கள்தான் ஒரு அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும்.

தற்போது எனது அமைச்சு நாட்டின் கனிம வளங்கள் உள்ள சகல பகுதிகளையும் அடையாளம் கண்டு வைத்துள்ளது. தேவையான முதலீட்டாளர்கள் அங்கு முதலீடு செய்வதற்கான அனுமதி வழங்கப்படும்.

நில அகழ்வுகளில் ஈடுபடுவதற்காக 64 முதலீட்டாளர்கள் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால்> இவர்களில்> 47 பேர் எந்த செயற்பாடுகளிலும் ஈடுபடாமல் அனுமதிப்பத்திரங்களை வேறு விதமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் அனுமதி ரத்துச்செய்யப்படவுள்ளது.

2023 ஆம் ஆண்டில்> ஒரு பில்லியன் டொலர் எமது அமைச்சின் கீழான நிறுவனங்களின் செயற்பாடுகளில் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இதனைக் கருத்திற்கொண்டுதான் அமைச்சின் கீழுள்ள இலாகாக்களின் அதிகாரிகளுடன் மாதாந்தம் சந்திப்புக்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.


No comments: