News Just In

8/09/2022 06:26:00 AM

உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா!

உக்ரைனுக்கு மேலதிகமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆயுத பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த உதவி வழங்கப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்த உதவி மூலம் உக்ரைன் படைகள், ரஷ்ய படைகளை தாக்க உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

75,000 ரவுண்டுகள் கொண்ட பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் 50 கவச மருத்துவ சிகிச்சை வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அமெரிக்க உதவிகள் உக்ரைன் மக்களையும் அந்த நாட்டையும் பாதுகாக்கவும் என்று பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுவிக்கப்படும் வரை நாங்கள் தொடர்ந்து அந்நாட்டுக்கு ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

No comments: