News Just In

7/11/2022 12:08:00 PM

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ரணிலிடம் அறிவித்தார் கோட்டா!




பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 9 போராட்டத்தின் வெற்றியை அடுத்து, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி பதவி விலகுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் தான் பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா குறித்து இதுவரை பகிரங்கமாக செய்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: