News Just In

6/06/2022 08:28:00 PM

ராஜபக்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்னிலங்கை மக்கள்- “Ranil Fail” புதிய காய் நகர்த்தல்!

ரணில் விக்ரமசிங்க சிறிலங்காவின் பிரதமராகி பல வாரங்கள் ஆகியும் இதுவரை வாக்குறுதி அளித்தபடி பல பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை கொண்டு வரமுடியவில்லை.

மக்கள் மூன்று வேளை உணவு உண்ண கூடிய சூழலை உருவாக்குவதற்காக, விலைவாசியை குறைக்க முடியவில்லை என சமுக ஆர்வலர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

அதுமட்டுமன்றி இவ்வாறான விடயங்களை அடிப்படையாக கொண்டு ரணிலுக்கு எதிரான பிரசார நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் தாமரை மொட்டு அணி மற்றும் சுயேட்சை அணி என இரண்டு முனைகளில் இருந்து ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் ரணிலை பதவியில் இருந்து அகற்றும் வேலைகளை திரைமறைவில் இருந்து பசில் ராஜபக்ச மேற்கொண்டு வருகிறார் எனவும், இதனொரு கட்டமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்து விட்டார் என கூறி “Ranil fail” என்ற பிரசாரத்தை முன்னெடுக்க பொதுஜன பெரமுன சார்பு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர் எவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியினால் கோட்டாபயவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான "Sir Fail" பிரசாரத்தை போன்று "Ranil Fail" பிரசாரமும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சமகாலத்தில் பிரதமராக செயற்படும் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் ராஜபக்சர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

21வது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாக இருப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி பறிபோகும் நிலை ஏற்படும். இரட்டை குடியுரிமை கொண்டவர்களை குறி வைக்கும் வகையில் இந்த திருத்தம் அமையவுள்ளது.

இதன்மூலம் பசில் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியுள்ளது. எனவே ரணிலை வெளியேற்ற ராஜபக்சர்களின் புதிய காய் நகர்த்தல் இடம்பெறுவதாகவும் இருப்பினும் ஏற்கனவே தென்னிலங்கை மக்கள் மத்தியில் பின்னடைவு கண்டுள்ள ராஜபக்சர்களுக்கு இந்த மாற்றம் பெரும் அதிர்ச்சிகரமானதாக மாறியுள்ளது.

இந்நிலையில் புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் எந்தவொரு சாதகமான தகவல்களையும் வெளியிடவில்லை. நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதும் சரி, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதும் சரி, நாடு வங்குரோத்து அடைந்துள்ளது.

பட்டினி தலைவிரித்தாடவுள்ளது. மக்கள் இரண்டு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள முடியும். இனிவரும் காலங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதை தெரிவித்து வருகிறார்.

பிரதமர் தெரிவிக்கும் விடயங்கள் உண்மையானவை என்ற போதிலும் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு இந்த தகவல் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: