அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரையில் இன்றையதினம் (ஜூன் 20) ஒரு வார காலப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று காலை 10.00 மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனையடுத்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
“இந்த அரச தலைவர் இருக்கும் வரை இந்த நாட்டுக்கு உலக உதவி கிடைக்காது. அரச தலைவராக இருந்து இந்த நாடு நாசமாக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தை நாம் கையளிக்கும் போது நாட்டின் பொருளாதாரத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இருக்கவில்லை. இறுதியாக இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இவரை போகச் சொல்கிறார்கள்என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments: