News Just In

6/23/2022 06:31:00 PM

நாளை முதல் எரிபொருள்களின் விலைஉயர்கிறது!! விலை விபரங்களுடன் தென்னிலங்கை ஊடகம் தகவல்!

நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 74 ரூபாவினால் அதிகரிக்கும் எனவும், 95 ஒக்டோன் பெட்ரோலின் விலை 78 ருபாவினால் அதிகரிக்கும் எனவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 56 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 65 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் 210 ரூபாவினாலும் அதிகரிக்கலாம் என குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

உலக சந்தையில் டொலர் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: