News Just In

6/07/2022 11:25:00 AM

தொடரும் பொலிஸாரின் வேட்டை: மறைந்திருக்கும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!





பல குழுக்கள் அனுப்பட்டபோதும் சி.ஐ.டி.யினர் இதுவரை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கண்டுபிடிக்க பல பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையில் அவர் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்ரின் பெயரை சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மஹிந்த கஹந்தகமவை ஜூன் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments: