News Just In

5/20/2022 06:11:00 AM

முச்சக்கர வண்டியை தள்ளிச்சென்ற குழந்தைகள்: மனதை கலங்கடித்த புகைப்படம்!

இலங்கையில் அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அரசாங்கத்தை பதவி விலக கோரி நாட்டு மக்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக நாட்டு மக்கள் பல்வேறு இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர்.

அப்படி நின்றும் கூட அவங்களுக்கு எரிபொருள் கிடைப்பதில்லை இதனால் மக்கள் பாரிய இன்னல்களுக்கு சந்தித்து வருகின்றனர்.

இதேவேளை இன்றைய தினம் மொரவாகா பகுதியில் முச்சக்கர வண்டி வைத்திருப்பவர் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தனது இரு பிள்ளைகளின் உதவியுடன் தள்ளி சொல்லும் காட்சி காண்போர் மனதை கலங்கடித்து உள்ளது.

No comments: