News Just In

5/05/2022 10:19:00 AM

குருக்கள்மடம் குரூ நன்க் சேவா ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடும் வெளிநாடுகளின் பக்தர்கள்.!



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் குருத்தூவார் (குரு நானக்) ஆலயத்திற்கு வெளிநாட்டுகளின் பக்கதர்கள் குழு ஒன்று செவ்வாய்கிழமை(03) மாலை வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த சீக்கியர்களால் நிருமாணிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருவது குருக்கள்மடம் குருத்தூவார் (குரு நானக்) ஆலயமாகத் திகழ்கின்றது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து சென்று தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் பிரபல யோகா பயிற்றுவிப்பாளரும், குரூ நானக் பக்தருமான சுவாமி அவர்கள் ஜேர்மன், மற்றும ஜப்பான், ஆகிய நாடுகளைச் சேர்ந்த அவரின் சீடர்களுடன் ஆலயத்திலும், குநானக் மதகுரு அவர்கள் காலத்தில் தேன்றிய தேத்தா மரத்தையும் வழிபாடு செய்தனர்.

500 வருடங்களுக்கு முன்ன சீக்கிய மதகுகு குருநானக் அவர்கள் மன்னார், அனுராதபுரம், மட்டக்களப்பு, குருக்கள்மடம் ஆகிய பிரதேசங்களுடாக கதிர்காமத்திற்கு கால்நடையாகச் சென்றவேளை அவர் குருக்கள்மடம் கிராமத்தில் தங்கியிருந்து சென்றதாகவும், அதன் ஞாபகார்தமாக குருக்கள்மடத்தில் குறித்த குருத்தூவார் (குரு நானக்) ஆலயம் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



No comments: