News Just In

5/05/2022 10:11:00 AM

பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு !



நூருல் ஹுதா உமர்

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் சிறுவர் நிகழ்ச்சிகளும் நேற்று புதன்கிழமை (4) அனஃபா சமூக சேவை நலன்புரி அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமாகிய ஏ. முஹம்மட் நளீம் தலைமையில் அதன் நிகழ்கால தலைவர் ஏ. நுஸ்மியா மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியால மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிப் பொருளாளரும் யஹியாகான் குரூப் நிறுவனத்தின் தவிசாளரும் ஹஸ்மியா முகவர் மற்றும் கானு பிரயாண நிறுவனத்தின் தவிசாளருமாகிய ஏ.சீ. யஹியாகான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கொண்டதுடன், கௌரவ அதிதியாக இலங்கை மின்சார சபை அம்பாறை பிராந்திய மின் பொறியியலாளரும் செஸ்டோ நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவருமாகிய எம்.ஆர்.எம். பர்ஹான் , நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம். பீ. நவாஸ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் நஸ்ரின் முர்ஷீத் அமீன், மேலும் அதிதிகளாக கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். ஸைபுதீன், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய உத்தியோகத்தர், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சீ. நஜீம், சமுர்த்தி உதவி முகாமையாளர் ஊடகவியலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments: